×

பனையபுரத்தில் சிவபெருமானை சூரியனார் வழிபடும் அதிசய நிகழ்வு

விக்கிரவாண்டி: பனையபுரம் கோயிலில் சிவபெருமானை சூரியனார் வழிபடும் அதிசய நிகழ்வு நடந்தது. விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த சத்தியாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்திரை மாதம் முதல் ஏழு நாட்களுக்கு சூரியபெருமான் சிவபெருமானையும் அம்பாளையும் வழிபடும் அதிசய நிகழ்வு நடைபெறும். இன்று சித்திரை மாதம் முதல் நாள் என்பதால் சூரிய பூஜை வழிபாடு நடந்தது. இதையொட்டி விநாயகர், ஆறுமுகனார், நாயன்மார்கள், சூரியனார், சத்தியாம்பிகை, பனங்காட்டீஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு சூரிய ஒலியானது மூலவரான ஈசனின் சிரசில் இறங்கி சூரிய வழிபாடு நடந்தது. அப்போது மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதனை அங்கு கூடியிருந்த பக்தர்கள், சிவாய நம, சிவ சிவ, ஓம் நமச்சிவாய என பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு அருகிலிருந்த சத்தியாம்பிகையின் சிரசில் ஒளிபட்டு வழிபாடு நடந்தது. பூஜைகளை கணேசன் மற்றும் பாபு குருக்கள் செய்திருந்தனர். இதில் கோயில் செயல் அலுவலர் நாகராஜன் உட்பட கிராம பொதுமக்கள், சுற்றப்புற கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shiva ,Lord Shiva ,Panayapuram , Panayapuram, Lord Shiva, Sunaranya, Wonderful Event
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்