×

எய்ட்ஸ் இருப்பதாக கூறி பலாத்காரம் செய்ய முயன்றவனை தலை தெறிக்க ஓட விட்ட விதவை

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் வலுஜ் பகுதியை சேர்ந்த 29 வயது விதவைப் பெண் தனது 7 வயது மகளுடன் கடந்த 25ம் தேதி கடைக்கு சென்றார். வீடு திரும்புவதற்கு ரூ.10 மட்டுமே கையில் இருந்த நிலையில், ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தார். ஆட்டோ கிடைக்கவில்லை. இதையடுத்து, லிப்ட்’ கேட்பதற்காக ஷா நூர்மியா மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த கிஷோர் விலாஸ் அவாத், தனது பைக்கில் அப்பெண்ணுக்கு லிப்ட் கொடுத்தார்.

ஆனால் அவர் அப்பெண்ணையும் அவரது மகளையும் ராஜ்நகரை அடுத்த நல்லா பகுதிக்கு கடத்தி சென்று கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது சுதாரித்து கொண்ட விதவைப் பெண் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறியதை அடுத்து, தானும் அந்நோயினால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் அப்பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அவாத் எஸ்கேப்’ ஆகி விட்டார்.

பின்னர் அப்பெண் கூறிய அங்க அடையாளங்கள், இளைஞனின் கையில் போடப்பட்டிருந்த டாட்டூ’ ஆகியவற்றைக் கொண்டு போலீசார் 2 நாளில் அவாத்தை கைது செய்தனர். அவன் மீது கடத்தல், பலாத்கார முயற்சி, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவாத் தனது தந்தையை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : widow , AIDS, rafting, attempted, head, run, widow
× RELATED ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த...