×

நான்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு

சென்னை: நான்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு மா.கம்யூ., இந்திய கம்யூ., வி.சி.க., உட்பட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக  மார்க் சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் காலியாக இருந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டபிடாரம் ஆகிய தொகுதிகளில் மே மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்து, திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

தற்ேபாது அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு மா.கம்யூ. கட்சி தனது முழுஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்திய கம்யூ., வி.சி.க., உட்பட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parties ,DMK ,constituencies , political parties, DMK candidate,
× RELATED ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்