தஞ்சை மக்களவை தொகுதி வேட்பாளர் சம்பத் ராமதாஸ், தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் துரைசாமி ஆகியோரை ஆதரித்து சிவகங்கை பூங்காவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இப்ப ஒருத்தர் வந்திருக்கார். அவர் மூன்றாவதாக துளிர் விட்ட இலை. அவர் எப்படி வந்தார், அவர்கள் யார், இந்த கூட்டம் என்ன செய்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.இப்ப நல்லா சிரிக்கிறார்.அதனால் நல்ல அரசியல் செய்வார் என்று நம்புகிறோம் என சொல்கிறார்கள். அது எப்படி செய்ய முடியும். உங்களுக்கு பரிசு பெட்டியை கொடுத்து விட்டு கஜானாவை தட்டி கொண்டு போகலாம் என்று நினைப்பவர்களை நீங்கள் எப்படி விடலாம். அவர் சரியா வரமாட்டார். உங்களுக்கு சின்ன பரிசு பெட்டியை கொடுப்பாங்க. ஆனால் பெரிய கஜானா காலியாகி விடும் என்பதை மறந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளர் பெயரை மாற்றி கூறிய கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் வளரும் தமிழகம் கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த துரைசாமி தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கமல், துரைசாமி என்று சொல்வதற்கு பதிலாக துரையரசன் என்று பேசினார். அருகில் நின்ற வேட்பாளர், துரைசாமி என்று திருத்தினார். இதன்பின்னரும் கமல் துரை, துரை என்று பலமுறை தட்டுதடுமாறி கடைசியாக துரைசாமி என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி