×

24 மணிநேர மருத்துவமனை அமைத்த தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு உற்சாக வரவேற்பு: பொதுமக்கள் நன்றி

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் நேற்று ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதியான 196 மற்றும் 198வது வட்டங்களில் பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.சி.முனுசாமி, தனபால், என்.சி.கிருஷ்ணன், பகுதி செயலாளர் லியோ சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன், வட்ட செயலாளர்கள் சிவலிங்கம், சரவணன், பாமக ராம்குமார், தேமுதிக முருகன், பாஜ மோகன்ராஜா, தமாகா கொட்டிவாக்கம் முருகன், சமக பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஜெகன், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது, அப்பகுதியில் 27 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை அமைத்து கொடுத்த வேட்பாளர் ஜெயவர்தனுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து நன்றி தெரிவித்தனர்.  அப்போது, ‘‘என்னை வெற்றி பெற செய்தால் மேலும் பல திட்டங்களை கொண்டு வருவேன்’’ என அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : south china ,AIADMK ,candidate , South Chauhan, AIADMK candidate Jayawardena, civilians
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன