×

குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கு 26ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சான்றிதழை 26ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 1 (2019ம் ஆண்டுக்கான) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர், சான்றிதழ் சரிபார்ப்புக்காக 10ம் தேதி (இன்று) முதல் 26ம் தேதி வரை வேலை நாட்களில் மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் சான்றிதழ்களை குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் முதனிலை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு  கோராத விண்ணப்பதாரர்கள்  அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200 அரசுப்பணியாளர் தேர்வாணைய  இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள  குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 26ம் தேதிக்கு முன்னர் கண்டிப்பாக செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Group 1 ,DNPCC ,writing test , Group 1, TNPSC
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: அரசு அறிவிப்பு