×

துணை நகரம் திட்டத்தை நிறுத்தியதே பா.ம.க.தான்: அன்புமணி சொல்கிறார்

திமுக கொண்டு வந்த துணை நகரம் திட்டத்தினை நிறுத்தியதே பாமக தான் என அன்புமணியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.  காஞ்சிபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  திருப்போரூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நமக்கு முக்கியமான ஒன்று. தமிழக உரிமைகளை மீட்டெடுக்க நாம் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். நாம் அனைவரும் ஓட்டு வங்கி உள்ள கட்சிகள். தேர்தல் பூத்தில் நாம் தான்  அதிகமாக இருப்போம். பூத்தில் என்ன நடக்கப் போகுது. சொல்வது புரிகிறது. வெளியில் சொல்ல முடியுமா, புரிஞ்சிக்கிட்டீங்களா, அவ்வளவுதான் முடிஞ்சி போச்சி.

 10 வருடங்களாக எம்.பி.யாக இருந்த ஏ.கே. மூர்த்தி கொண்டு வந்த சென்னை - புதுச்சேரி இடையே ரயில் திட்டத்தை செயல்படுத்தனும்னா எங்களுக்கு வாக்களியுங்கள். எங்களால்தான் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.  அதேபோன்று பக்கிங்காம் கால்வாயில் நீர் வழிப் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும்.  தி.மு.க. ஆட்சியில் திருப்போரூர் பகுதியைச் சுற்றிலும் துணை நகரம் திட்டம் கொண்டு வந்தார்கள். அதை தடுத்து நிறுத்தியது யார் தெரியுமா. பா.ம.க.தான். உங்களுக்கு ஒன்னுன்னா ஓடோடி வருவோம். இப்ப நீங்க  சுயமரியாதையோடு வாழறீங்கன்னா அதுக்கு பா.ம.க.தான் காரணம். இல்லன்னா யார் வீட்டிலேயோ பத்து பாத்திரம் தேய்ச்சிக்கிட்டு இருந்திருப்பீங்க. அதை மறந்துடாதீங்க.     அய்யா ராமதாஸ் ஒரு விவசாயி, எடப்பாடி விவசாயி,  ஓ.பன்னீர்செல்வம் ஒரு விவசாயி. இவ்வாறு அவர் பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PMK ,Dhammaani , PMK, stopping ,vice-city ,Dhammaani ,
× RELATED எப்போது வேண்டுமானாலும் மோடியை நான்...