×

தி.நகர் சுற்றுவட்டாரத்தை கலக்கிய தலைமறைவு கொள்ளையன் கைது: 81 சவரன் நகை, வெள்ளி கட்டிகள் பறிமுதல்

சென்னை: தி.நகர் சுற்றுவட்டாரப் பகுதியை கலக்கிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 81 சவரன் நகை, வெள்ளி கட்டிகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை மாம்பலம் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தேடி வந்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே  உள்ள பாளையம்பட்டியை சேர்ந்த மலர்மன்னன்(எ)மாணிக்கம்56) என்று தெரியவந்தது. பிரபல கொள்ளையனான இவன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் மட்டும் 12 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுபோல்  பல்வேறு காவல் நிலையங்களில் 50 வழக்குகள் உள்ளது.

அதைதொடர்ந்து கொள்ளையன் மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் மாணிக்கத்தை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவனிடம்  நடத்திய விசாரணையில், பகல் நேரத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது ெதரியவந்தது. பின்னர் தனிப்படை போலீசார் விருதுநகருக்கு அழைத்து ெசன்று,  கொள்ளையன் மாணிக்கத்திடம் இருந்து 81 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி கட்டிகள், லேப்டாப் ஒன்று, கேமரா 2 மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவன் 8 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த ஊரில் சொத்து
கொள்ளை அடிக்கும் நகை மற்றும் பணத்தில்  சொந்த ஊரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். ஏசியுடன் கூடிய அடுக்குமாடி கட்டி அவன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது  விசாரணையில் தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sailor ,robbery ,tumper ,T Nagar , The Nagar , surrounding ,robber arrested:,jewelry ,silver tumors
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...