×

மக்களோடு மக்களாக உங்களுடன் இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தருவேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி

ெசன்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்க கோரி வீதி, வீதியாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிமுக வேட்பாளர்  ஜெயர்வதன் தி.நகர் பவர் ஹவுஸ் பகுதி, கங்கை அம்மன் கோயில் அருகில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி சுற்றுவட்டார பகுதி முழுவதும் மக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, அவர், நான் மக்களோடு மக்களாக உங்களுடன் இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தருவேன். இன்னும் தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன். 24 மணி நேரம் மக்கள் என்னை சந்தித்து உங்களது குறைகளை தெரிவிக்கலாம். நான் முடிந்த அளவு கட்டாயம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு பாடுபடுவேன்.

எனது தொகுதி மக்களுக்கு நாடாளுமன்றத்தில் எப்போதும் குரல் கொடுத்து கொண்டே இருப்பேன். எனவே, மீண்டும் எனக்கு தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றி பெற ெசய்ய வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைத்தப்படியே வாக்கு சேகரித்தார். அப்போது சாலையில் நடந்து ெசன்றவர்களிடமும், வாகனங்களில் செல்வோரிடமும் ஜெயவர்தன் வாக்குசேகரித்தார். பிரசாரத்தின் போது, வேட்பாளர் உடன் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான தி.நகர் சத்யா, பகுதி செயலாளர் டி.டி.பால்ராஜ், வட்ட செயலாளர்கள் வி.எஸ்.வெங்கட், மோல்டிங் மணி, அமாவாசை மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாமக லோகநாதன், தேமுதிக வி.சி.ஆனந்தன், பாஜ டால்பின் ஸ்ரீதர், தமாகா மனோகர், புதிய நீதி கட்சி துரைராஜ், புரட்சி பாரதம் ராஜி மற்றும் சமகவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayawardene ,AIADMK , AIADMK candidate, Jayawarden,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...