திண்டிவனம்: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். திண்டிவனம் காந்தி சிலை அருகில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அங்கு நேற்று காலை கட்சியினர் தொண்டர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால் தொண்டர்களை போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி முதல்வர் பழனிசாமி பேசும் இடத்திற்கு வெகு தூரமாக நிறுத்தியிருந்தனர். இதனிடையே முதல்வர் பழனிசாமி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் உள்ளே வராதவாறு ஏன் இதுபோன்று தடுப்பு அரண்களை அமைத்துள்ளீர்கள் என டிஎஸ்பி சிலம்பரசனுக்கு டோஸ் விட்டார். பிறகு தடுப்புகளை அகற்றி தொண்டர்களை உள்ளே வருமாறு அழைத்தார். முதல்வர் பழனிசாமியின் வாகனம் நின்று பிரசாரம் செய்யும் இடத்தின் அருகிலேயே தொண்டர்களை நிற்க வைத்தார். இந்நிலையில் காலை 11 மணிக்கு வந்த முதல்வர் பழனிசாமி, தொண்டர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். இதன்பின்னரும், முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரியையும் சாடினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி