×

உள்ளூர்காரரு உளுந்தவடை சுடுறதுக்கு போயிடுவாரு..... உதயகுமாரு ஜாலி பேச்சு

தேனி மாவட்டம், போடியில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வாரிசு அடிப்படையில் நிறுத்தப்படவில்லை. கட்சியில் உழைப்பின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளார். எதிரே இருப்பவர்கள் தேர்தலில் நிற்க சின்னத்தை தேடி கொண்டிருக்கின்றனர். அவர்கள் தேடி பிடிப்பதற்குள் தேர்தல் முடிந்துவிடும். இத்தொகுதியில் ஈரோட்டை சேர்ந்தவர் ஈடுகொடுக்க முடியாமல் ஓடிவிடுவார்.

உள்ளூரை சேர்ந்தவர் (தங்கதமிழ்செல்வன்) உளுந்தவடை சுட சென்று விடுவார். நாங்கள் கடமை உணர்வுடன் வென்று செயலில் காண்பிப்போம்’’ என்றார். கூட்டத்திற்கு வந்த தேமுதிக, பாமக, பாஜ கட்சியினரை பற்றி அமைச்சர் பேச்சின் போது குறிப்பிடவில்லை. அதனை சிலர் ஞாபகப்படுத்தியபோது, சுதாரித்து வரவேற்று பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Udayakumar,
× RELATED பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும்...