×

பாஜ, காங். அல்லாத ஆட்சிதான் அமையும்: ஓவைசி நம்பிக்கை

ஐதராபாத்: ‘‘மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜ, காங்கிரஸ் இல்லாத முன்னணியே ஆட்சி அமைக்கும்’’ என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.ஐதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் 3 முறை எம்பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி. இவர் மீண்டும் இத்தொகுதியில்  போட்டியிடுகிறார். இவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘2014ம் ஆண்டு வீசியது போல் இப்போது மோடி அலை வீசவில்லை. இது ஒரு வெளிப்படையான தேர்தல். ஒவ்வொரு தொகுதிக்கும்  போட்டி இருக்கிறது. ஏன் ஐதராபாத் தொகுதிக்கு கூடத்தான். பாஜ, காங்கிரசில் இல்லாமல், தெலங்கானா ராஷ்டிரிய சமதி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ்  தலைமையிலான முன்னணியில் ஏஐஎம்ஐஎம்  இடம்பெறும். மோடி, ராகுலை விட பல பிராந்திய தலைவர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

மக்களின் நம்பிக்கையை பாஜ இழந்துள்ளது. அதனால்தான் தனது தோல்விகளை மறைக்க, சர்ஜிக்கல் ஸ்டிரைக், அதன் பிறகு பாலக்கோட் தாக்குதல், தற்போது  செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இதை எல்லாம் நம்பி மக்கள் மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள். இந்த தேர்தலுக்குப்  பிறகு மத்தியில் பாஜ, காங்கிரஸ் அல்லாத முன்னணியே ஆட்சி அமைக்கும்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Owaisi , Bhajah, kong., Owaisi,
× RELATED நாடாளுமன்றத்தில் முஸ்லிம்...