×

அமமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண் மீது அதிமுகவினர் சரமாரி தாக்கு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டபேரவை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் போட்டியிடுகிறார். அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த 24ம் தேதி பேரணாம்பட்டு டவுன் 18வது வார்டு காரைகாடு பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது ரபீக் மனைவி ஜம்துனா(40) என்பவர் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தார். இதையறிந்த அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தியின் ஆதரவாளர்கள் 4 பேர் மறுநாள் காலை ரபீக் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த ஜம்துனா மற்றும் அவரது மகன் சாஜ்உதின் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

இதில் காயமடைந்த இருவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அமமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன், குடியாத்தம் சட்டபேரவை தொகுதி தேர்தல் அதிகாரி நந்தீஸ்வரனிடம், தனது ஆதரவாளரை அதிகமுகவை சேர்ந்த 4 பேர் தாக்கியதாக புகார் அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aamir ,Arathi ,striker , Arathi, woman, attack, ammk,admk,
× RELATED தேர்தலின்போது ‘டீப் பேக்’...