×

கூலிப்படை தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி வெட்டிக்கொலை

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை விவேகானந்தர் நகர் 12வது தெருவை ேசர்ந்தவர் பாஸ்கர் என்கிற படப்பை பாஸ்கர் (38). பிரபல ரவுடி. இவர்  நேற்று மதியம் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக்  கடை அருகே சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4 ேபர் அவரை மடக்கி கத்தி மற்றும் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மணிமங்கலம் போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:பாஸ்கர், சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி பங்க் குமாரின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது மாம்பலம், குமரன்நகர், ஒரகடம், பள்ளிக்கரணை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகள் உள்ளது. கடந்த 2006ம்  ஆண்டு பங்க் குமாரை போலீசார் சுட்டு கொன்றனர். இதனையடுத்து, அவரது கூட்டாளிகள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பியோடி தலைமறைவாகினர்.

இந்நிலையில் பங்க் குமாரின் நெருங்கிய கூட்டாளியான பாஸ்கர் படப்பையில் தஞ்சம் அடைந்தார். மேலும் பாஸ்கர் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம் பறித்து ரவுடியாக சுற்றி வந்துள்ளார். மேலும் கூலிப்படையாகவும் செயல்பட்டு  வந்துள்ளார். கடந்த ஆண்டு தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாம்பலத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது.எனவே இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாரேனும் இவரை பழிவாங்க கொலை செய்தனரா? என போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : wicker ,Rowdy , Acting mhead mmercenarym Popular mRowdy Bar
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...