×

திருவண்ணாமலை உலக மாதா ஆலயத்தில் பணம் பெறாமல் நேர்மையாக வாக்களிப்போம் என பொது மக்கள் உறுதிமொழி

திருவண்ணாமலை: பணம் பெறாமல் நேர்மையாக வாக்களிப்போம் என திருவண்ணாமலை உலக மாதா ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்த 1,000 க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஜாதி, மதம், இனம், மொழி இவற்றை  பார்க்காமல் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் நேர்மையான முறையில் வாக்களிப்போம் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி முன்மொழிய உலக மாதா ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பின் உலக மாதா ஆலயத்தின் வெளிப்புறம் வைக்கப்பட்டிருந்த வாக்களிக்கும் இயந்திரத்தை எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : public ,Thiruvannamalai Mutta , Thiruvannamalai, World Mut, Money, Honest, Vote, People, Promise
× RELATED தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து...