×

4 முறை தொடர் வெற்றி பெற்ற இணை அமைச்சருக்கு போட்டியிட சீட் இல்லை: பாஜ தடாலடி; ஆதரவாளர்கள் அதிர்ச்சி

சட்டீஸ்கரில் உள்ள 11 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜ அறிவித்துள்ளது. ராய்கர் தொகுதியில் தொடர்ந்து வென்று வந்தவர் விஷ்ணுதியோ சாய். 1999, 2004, 2009, 2014 என அடுத்தடுத்த மக்களவை தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றார். தற்போது இணை அமைச்சராகவும் உள்ளார். சட்டீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனால் சட்டீஸ்கரில் அதிரடி மாற்றமாக கடந்த 2014 தேர்தலில் வெற்றி பெற்ற 10 எம்.பிக்களில் ஒருவருக்கும் மீண்டும் சீட் தரப்படாது என பாஜ தலைமை அதிரடியாக அறிவித்தது.இதன்படி,  விஷ்ணுதியோவின் தொகுதியான ராய்கரிலும் புதுமுகத்துக்கே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதனால் விஷ்ணுதியோவும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajarathaladi ,successor minister ,supporters , bjp
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...