×

கொள்ளையடிக்கிற ஆட்சி பலாத்கார ஆட்சியா மாறிடுச்சி: காசிமுத்து மாணிக்கம் கோபம்

திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசியதாவது: நடைபெற உள்ள தேர்தலில் 40 தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் தான் நிற்கிறார் என்கிற முடிவில் தான் இங்கு வேலை பார்த்து கொண்டிருக்கிறோம். முன்பு பேசிய கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் இது கொலைகார ஆட்சி என்று சொன்னார். ஆமாம். இதுவரைக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னையில் 13 பேரை கொன்றால் அதுவும் கொலைகார ஆட்சி தான். செம்மரக்கடத்தலில் 20 பேர் என்று சொல்லவிட்டு, வீட்டிலே படுத்திருப்பவனை கொன்றால் அதுவும் கொலை தான். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு ஆயிரக்கணக்கானோரை கொன்றால் அதுவும் கொலை தான்.

  சசிகலாவை பொறுத்தவரைக்கும், நீங்க சொல்லுங்க.. ரெண்டு இட்லி எவ்வளவு? நம்ம ஊர்ல 20 ரூவா. 100 ரூவான்னு வெச்சுகுங்க. ஒரு வேளைக்கு 100 ரூவான்னா, மூணு வேளைக்கு 300 ரூவா. அவ்வளவு தானங்க. 75 நாள், ரெண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு அதிகபட்சமா சாப்பிடலாம். ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு இட்லி தின்றுருக்காங்கன்னு சொன்னா, நல்லா யோசிச்சி பாருங்க. அங்க அஞ்சாரு பேரு தான் இருந்தாங்க. ஆனா ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு திங்க முடிதுன்னா. என்னடா ஆச்சி. அந்தம்மா பொழைக்கனுங்கிறதுக்காக உட்கார்ந்து தின்னிங்களா... இல்ல எப்படா இவ சாவா சொத்தெல்லாம் பறிச்சிக்கலாம்னு இருந்தீங்களான்னு நாட்டு மக்கள் கேட்கிறான்.

அதனால தான் 900 ஏக்கர் நிலத்துல 10,800 பேர் இருக்கலாம். ஆனா அந்த அம்மா மட்டும் போய் தனியா இருந்தாங்க. அதனால தான் இப்போ கொலை நடக்குது இந்த கொலைகார ஆட்சில. இது கொள்ளையடிக்கிற ஆட்சி. இப்போ பலாத்கார ஆட்சி. பொள்ளாச்சில நடந்ததெல்லாம் நீங்க பேப்பர்ல படிச்சிருப்பீங்க. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டணி.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kasimuthu , violent ,Kasimuthu gem
× RELATED கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அதிரடி போதைப்பொருளின் தாய்மடி குஜராத்