×

திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மர்மச்சாவு: ஆர்டிஓ விசாரணை

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராமில் திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து ஆர்டிஒ தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.ஆவடி அடுத்த பட்டாபிராம், ராஜீவ்காந்தி நகர், விவேகாநந்த தெருவை சேர்ந்தவர் சிவா. கட்டிட கான்ட்ராக்டர். இவருக்கும், சென்னை, கே.கே.நகர் சேர்ந்த சவுந்தர்யா (21) வுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.  சவுந்தர்யா தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் சவுந்தர்யா கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர், தாயாரிடம் அவர் போனில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர், அவர், இரவு சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு  சென்று தனியாக தூங்கி விட்டார்.

இந்நிலையில், நேற்று காலை சவுந்தர்யா வெகுநேரமாகியும் படுக்கையறை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து அவரை கணவர் சிவா எழுப்பி உள்ளார். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.  இதனை அடுத்து, அவரை மீட்டு பட்டாபிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் உதவி கமிஷனர் ஜான் சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார். மேலும், சவுந்தர்யாவுக்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆவதா திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 5 months , marriage, Rupa Mara ,Chakra, RTO Investigation
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...