×

பைக் விபத்தில் மாணவன் பலி

ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் ராகுல் விஸ்வநாதன் (17), ஆவடி, காமராஜர் நகர், வ.உ.சி தெருவை சேர்ந்த கிரண் (17). இருவரும் திருமுல்லைவாயல் பகுதியில்  உள்ள தனியார் டிப்ளமோ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று மாலை ராகுல், கிரண் ஆகிய இருவரும் நண்பர்களை பார்க்க பைக்கில் புறப்பட்டனர். இவர்கள் ஆவடி, காமராஜர் நகர் சேக்காடு ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலை தடுமாறிய  பைக் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.  அவர்களை பொதுமக்கள் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்   ஏற்கனவே ராகுல் இறந்ததாக தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,bike accident , student, killed , bike accident
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...