×

‘எம்எல்ஏ சீட்டு தான் தரலை... எம்பி சீட்டாவது கொடுங்க...’: எடப்பாடியிடம் மன்றாடும் மாஜி

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனக்கு எம்பி சீட் கேட்டு எடப்பாடியிடம் காய் நகர்த்தி வருகிறார். அதிமுக அரசில் கடந்த 1991 முதல் 1996 வரை மூன்று முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜகண்ணப்பன். இவர் அதிமுகவை விட்டு வெளியேறினார்.   மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான ராஜகண்ணப்பனுக்கு கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அவர் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுகவில் தனி டீம் தீவிரமாக வேலை பார்த்தது. இந்த தேர்தல்களில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் 2016 சட்டமன்ற தேர்தல், 2014 மக்களவை தேர்தலில் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை.

இதே மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் கோகுல இந்திராவுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினர். கோகுல இந்திராவுக்கு அமைச்சர் பதவி, கட்சி பதவி என வழங்கி ராஜகண்ணப்பனை வளரவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதனால் மனம் வெறுத்துப்போய் ஒதுங்கியிருந்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மீண்டும் அதிமுகவின் கட்சிக் கூட்டங்களில் தலை காட்டினார்.  இந்நிலையில் மக்களவை தேர்தலில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை இவற்றில் ஏதேனும் ஒரு தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடியிடம் பேசி காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும் போட்டி பலமாக உள்ளதால் சீட் கிடைப்பது கடினம் என ராஜகண்ணப்பன் தவிப்பில் உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,MB , 'MLA's,MB , Seat
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...