×

விருதுநகரில் பராமரிப்பு பணிகள்: நெல்லைக்கு வரும் ரயில்கள் 18ம் தேதி முதல் தாமதம்

நெல்லை: விருதுநகர்- வாஞ்சி மணியாச்சி இடையே நடக்கும் பணிகளால் நெல்லைக்கு வரும் ஒரிரு ரயில்கள் 18ம் தேதி முதல் தாமதமாக வர உள்ளன. மதுரை கோட்டத்தில் விருதுநகர்- வாஞ்சி மணியாச்சி இடையே பொறியியல் பிரிவு பணிகள் நடக்க உள்ளன. இதையடுத்து தாதரில் இருந்து நெல்லை வரும் தாதர் எக்ஸ்பிரஸ்(எண்.11021) வரும் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை, திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 25 நிமிடங்கள் தாமதமாக, அதாவது பகல் 12.10 மணிக்கு நெல்லை வந்து சேரும். கோவை- நாகர்ேகாவில் பாசஞ்சர் ரயில்(எண்.56320) வரும் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை 45 நிமிடங்கள் தாமதமாக நெல்லைக்கு வரும். திருச்செந்தூர்- பாலக்காடு பாசஞ்சர் ரயில்(எண்.56770) குறிப்பிட்ட தேதிகளில்(வியாழன் தவிர்த்து) பொள்ளாச்சிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக, அதாவது இரவு 9.40 மணிக்கு போய் சேரும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Virudhunagar ,Nellu , Nellai, delay, trains
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு