×

விசாவுக்காக இந்தியர்களை அமெரிக்கர்களுக்கு திருமணம் செய்து வைத்தவர் மீது புகார்

விசாவுக்காக இந்தியர்களை அமெரிக்கர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக ரவி பாபு என்பவர் அந்நாட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார். அமெரிக்காவிற்கு சென்று அங்கு பணிபுரிய விசா பெறுவதற்க்கு ஒரு வழியாக அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களை திருமணம் செய்துக் கொள்வது அமெரிக்க சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதில் 47 வயதான ரவி பாபு கொல்லா என்பவரும், 40 வயதான அமெரிக்க குடிமகளான கிரிஸ்டர் கிளவ்டு என்பவரும் சேர்ந்து இந்த திருமண மோசடியை அரங்கேற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பணம் கொடுத்து 80க்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கர்களுக்கு சட்டவிரோதமாக திருமணம் செய்து வைத்து முறைகேடாக விசா பெற்று தந்தது தெரிய வந்துள்ளது. இதில் ஈடுபட்ட அமெரிக்க குடியுரிமை பெற்றவர்க்கு 2 ஆண்டு சிறை தண்டனை  விதிக்கபட்டுள்ள நிலையில், சதி மற்றும் பண மோசடி குற்றங்களுக்கு ரவி பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indians ,Americans , For visa, Indians, Americans, Marriage, Making, Complaint, Complaint
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...