×

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பு நேரில் ஆஜராக கலெக்டருக்கு உத்தரவு

மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் கலெக்டர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த  காட்டுராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்  செய்த மனு:   ராமையன்பட்டி ஊராட்சி பகுதியில் நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான 150 ஏக்கரில் குப்பைகள் கொட்டப்படுகிறது.  மழைக்காலங்களில் குப்பை மேட்டிலிருந்து  வரும் கழிவுநீர், அருவன்குளம் கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில்  கலக்கிறது. இதனால் தாமிரபரணி ஆறு அசுத்தம் அடைந்து வருகிறது. எனவே குப்பையை அகற்றவும்,  இனிமேல் அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதித்தும் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகிேயார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க காலஅவகாசம் கோரப்பட்டது.இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “தாமிரபரணி ஆற்றில்  கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும். இதுகுறித்து என்ன நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க நெல்லை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : collector ,Tamaraparani , Salt mixture ,tamarabarana, Collector,person
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...