×

வேலைக்கு தாமதமாக வந்த தகராறில் விபரீதம் டாஸ்மாக் பார் ஊழியர் அடித்துக்கொலை: சூபர்வைசர் கைது

பூந்தமல்லி: மதுரவாயலில் வேலைக்கு தாமதமாக வந்ததால் நடந்த தகராறில் டாஸ்மாக் பார் ஊழியர் சரமாரியாக அடித்துக்கொலை செய்யப்பட்டார். மதுரவாயல்-ஆலப்பாக்கம் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இந்த மதுக்கடையின் பார் அருகே தலையில் பலத்த காயத்துடன் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் டாஸ்மாக் பாரில் தங்கி வேலை செய்த அதேப் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (60) என்பது தெரிய வந்தது. இவர், சம்பவம் நடந்த முன்தினம் இரவு தாமதமாக வேலைக்கு வந்துள்ளார். இதுகுறித்து பார் சூபர்வைசர் ராஜா (23) என்பவர் மகேந்திரனிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா மகேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். கீழே விழுந்த மகேந்திரன் மயக்கமாகி விட்டார். பின்னர் அவரை தரதரவென இழுத்து சென்று ஓரமாக படுக்க வைத்து விட்டு ராஜா சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் இறந்ததும் தெரிந்தது. இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sukhbirasar , Tasmac, Superintendent, arrested
× RELATED வேலைக்கு தாமதமாக வந்த தகராறில்...