×

பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய நாகராஜனின் மதுக்கூடம் பொதுமக்களால் சூறையாடல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்துள்ள பார் நாகராஜனின் மதுக்கூடம் பொதுமக்களால் சூறையாடப்பட்டது. பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர நிகழ்வின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ள பார் நாகராஜ் என்பவரின் மதுபானக்கூடம் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பார் நாகராஜன் அதிமுக பிரமுகர் ஆவார். இவரை சமீபத்தில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். பொள்ளாச்சி விவகாரத்தில், 4 பேரை போலீசார் கைது செய்து தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்கள் 4 பேருக்கும் உறுதுணையாக இருந்த பார் நாகராஜ், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக கூறி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமினில் வெளிவந்துள்ள அவர் தலைமறைவாகியுள்ளார். இவருக்கு சொந்தமான பார் பொள்ளாச்சியில் கோட்டூர்புரம் சாலையில் அமைத்துள்ளது. தற்போது இந்த மதுக்கூடத்தை அப்பகுதி பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், பொள்ளாச்சி விவகாரத்தில் பார் நாகராஜுக்கு தொடர்பு இருப்பதால், அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagarajan ,affair ,Pollachi ,public , Pollachi, sexual abuse, alcohol, scorpions, civilians
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!