×

அதிமுக அரசு குற்றப்பின்னணி கொண்டதாக திகழ்கிறது : கே.பாலகிருஷ்ணன் தாக்கு

சென்னை; பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அரசியலாக்க கூடாது என்று தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இவ்விகாரத்தை அரசியலாக்கினால் நேர்மையான முறையில் விசாரணை நடைபெறாது என கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளை தூக்கிலிட்டு தண்டிக்க வேண்டும் என்றார். ஆனால் இந்த கொடூர குற்றத்தை அரசியலாக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மிருகங்களை வி்ட கேவலமானவர்கள் என்றார்.

பொள்ளாச்சி சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் தம்மால் அதனை ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை என்றார் தமிழிசை. பெண் குழந்தைகள் இந்தளவிற்கு கசக்கி வீசப்பட முடியும் என்றால் , அதனை யாராலும் பொறுத்து கொள்ள முடியாது என்றார். பொள்ளாச்சி சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு குற்றப்பின்னணி கொண்ட அரசாக திகழ்வதாக சாடினார். மேலும் இவ்வழக்கில் அரசியல் தொடர்பு இல்லை என்பதும், புகார் தருபவர்களை மிரட்டுவதையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,government ,K.Balakrishnan , Pollachi, K.Balakrishnan, raped girls
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...