×

போக்குவரத்துக்கு இடையூறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து போலீஸ் ஏட்டை தாக்கிய நடிகை

* வேப்பேரியில் பரபரப்பு
* போலீசார் விசாரணை

சென்னை: சாலையில் காரை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டிக்கேட்ட காவலரை, நடிகை ஜூலி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் வேப்பேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வேப்பேரி டவுட்டன் ரித்தர்ட்டன் சாலையில் ேநற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் கார் ஒன்று சாலையின் குறுக்கே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. அப்போது, வேப்ேபரி காவல் நிலைய தலைமை காவலர் பூபதி, மேலும் காவலர்கள் 2 பேருடன் வீட்டிற்கு ெசன்று கொண்டிருந்தார். ரித்தர்ட்டன் சாலையில் நீண்ட நேரமாக வாகனங்கள் நெரிசலுடன் காணப்பட்டதால் தலைமை காவலர் பூபதி தனது பைக்கை நிறுத்திவிட்டு போக்குவரத்தை சரிசெய்ய சென்றுள்ளார்.

 அப்போது, காரில் நடிகை ஜூலி அவரது ஆண் நண்பர்கள் பிரசாத் உட்பட 2 பேர் இருந்துள்ளனர். இதை பார்த்த தலைமை காவலர், காரை ஏன் நடுரோட்டில் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு காரில் இருந்த பிரசாத், உன் வேலையை பார்த்து செல் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தலைமை காவலரை காரில் இருந்த பிரசாத் தாக்கியுள்ளார். பதிலுக்கு தலைமை காவலரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரசாத் தனது சக நண்பர்களை போன் செய்து வரவழைத்து தலைமை காவலர் பூபதியை சாலையிலேயே கடுமையாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். இதில் தலைமை காவலர் பூபதிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

பின்னர் காயமடைந்த பூபதி வேப்பேரி ேபாலீசில் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் பெற்று தர வேண்டும் என்றும் வாய்மொழியாக புகார் அளித்துள்ளார். அதேபோல் நடிகை ஜூலி தரப்பினரும் தலைமை காவலர் பூபதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரண்டு புகார்களின் அடிப்படையில் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வேப்பேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : actress ,police landlord ,friends , actress julie
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...