×

கத்தி முனையில் மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் சண்முகபுரத்தில் வசித்து வருபவர் நவீனா (22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், கணவரை பிரிந்து, இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில், இவரது வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே எழுந்துவந்து கதவை திறந்தபோது திடீரென வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி நவீனாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் நவீனா பயந்து அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

 இதைப் பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் சாத்தாங்காடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அதே பகுதி சண்முகபுரம் 4வது தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக் (20) என்பதும், நவீனா கணவன் இல்லாமல் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, குடிபோதையில் அவரது வீட்டுக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. அவரை, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : knife, girl raped, young man, arrested
× RELATED பிரதமர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரி என கூறி...