×

ஒகேனக்கல் சாலையோரம் சுற்றித்திரியும் ஒற்றை யானை : சுற்றுலா பயணிகள் பீதி

பென்னாகரம்: ஒகேனக்கல் பென்னாகரம் சாலையோரத்தில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. வறட்சி காரணமாக, யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அடிக்கடி நடந்து வருகிறது. பண்ணப்பட்டி பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக, யானைகள் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால், ஒகேனக்கல் பென்னாகரம் சாலையோரங்களில் ஒற்றை யானை சுற்றித்திரிகிறது.

சாலையோரம் இருக்கும் மரக்கிளைகளை உடைத்து, சாலையோரத்தில் வீசி வருகிறது. மேலும், உணவு தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்கு யானைகள் செல்வதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். சாலைகளில் சுற்றும் யானைகளை கண்டு, சுற்றுலா பயணிகள் செய்வதறியாமல் உள்ளனர். எனவே சாலையோரங்களில் முகாமிட்டு சுற்றித்திரியும் யானைகளை விரட்டவும், வனப்பகுதியில் தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hoganakkal, Elephant, Tourists
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி...