×

கர்நாடகாவில் 2 கட்டமாக தேர்தல் பாஜ பயப்படுகிறது: மஜத தலைவர் கிண்டல்

பெங்களூரு: பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தினால் தான் கர்நாடகாவில் இரண்டு  கட்டமாக தேர்தல் நடக்கிறது என்று மஜத மாநில தலைவர் எச். விஸ்வநாத்  குற்றச்சாட்டியுள்ளார். பெங்களூருவில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத  கூட்டணி  மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு  செய்துள்ளது.  இரண்டு கட்சிகளில் தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் பட்டியல்  ஆகியவை வரும் வியாழக்கிழமைக்குள் வெளியிடப்படும்.  

மேலும் 39 தொகுதிகளை  கொண்ட தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் நிலையில் கர்நாடகாவில்  இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது பாஜகவின் சூழ்ச்சி. பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள தோல்வி  பயத்தினால் கர்நாடகாவில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த பாஜக சூழ்ச்சி  செய்து உள்ளது. மேலும் முதல் கட்ட தேர்தல் 18ம் தேதி நடந்து முடிந்தவுடன் பாஜ தலைவர்கள் ஏப். 23ம் தேதி நடக்கவுள்ள தேர்தலின் போது கலவரத்தில் ஈடுபட  திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka ,Kundal ,Majid , Karnataka poll, jds
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி