×

சினிமா பாணியில் சம்பவம் குளச்சலில் ஓட்டல் சூறை: கும்பல் தப்பியோட்டம்

குளச்சல்: குளச்சல் இலப்பவிளையை சேர்ந்தவர் ஜவஹர் சாதிக் மகன் அன்வர் சாதிக்(35). இவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் பாலப்பள்ளம் குன்னன்விளையை சேர்ந்த மார்சல் பிரேனட் ஆலன் என்பவரது மனைவி ஜோஸ்பின் ஸ்டெல்லா என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடத்தில்  வாடகை ஒப்பந்தம் செய்து ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பகல் இந்த ஓட்டல் முன்  ஒரு மினி ெடம்போ வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து திபுதிபுவென இறங்கிய கும்பல் ஒன்று ஓடிவந்து ஓட்டலில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியது. மேலும் ஓட்டலின் பெயர் பலகை மற்றும் மின்விளக்குகளையும் அகற்ற முயற்சித்தது. இதனால் அதிர்ச்சிடைந்த அன்வர் சாதிக் சப்தமிட்டார்.

இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் ‘‘ஏன் ஓட்டலை சேதப்படுத்துகிறீர்கள்?’’ என கேட்டனர். இதனால் பொதுமக்களுக்கும், கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. பின்னர் கும்பல் அன்வர் சாதிக்கிடம் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று  விட்டது. கும்பல் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் மினி டெம்போவில் பயங்கர ஆயுதங்களுடன் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அன்வர் சாதிக்கின் உறவினர் கலீல் ரகுமான் என்பவரும் படுகாயம் அடைந்தார். அவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் விசாரித்து வருகின்றனர். காவல் நிலையம் அருகே உள்ள இந்த ஓட்டல்  சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident , Cinematic style, cooling, hotel charm
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...