×

சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக விஜயகுமார் நியமனம்: சைலேந்திரபாபு உட்பட 5 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: தமிழக சட்டம் -ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக விஜயகுமார் உட்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த விஜயகுமார் அதே பணியிடத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாகவும், ரயில்வே கூடுதல் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு அதே இடத்தில் டிஜிபியாகவும், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கூடுதல் டிஜிபியாக இருந்த கரன்சின்கா அதே பணியிடத்தில் டிஜிபியாகவும், சிவில் சப்ளை சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த பிரதீப்.வி.பிலீப் அதே பணியிடத்தில் டிஜிபியாகவும், காவலர் பயிற்சி பள்ளி கூடுதல் டிஜிபியாக இருந்த குடவாலா அதே பணியிடத்தில் டிஜிபியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஷ்குமார் சென்னை கூட்டு கொள்ளை தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், சென்னை கூட்டு கொள்ளை தடுப்பு பிரிவு எஸ்பியாக இருந்த ராஜன் தர்மபுரி மாவட்ட எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் உள்ள டிஜிபிக்களின் எண்ணிக்கை தற்ேபாது 11 ஆக உள்ளது. தற்போது கூடுதலாக 5 பேருக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில், 16 டிஜிபி பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wijayakumar ,Digi ,Cylindrababu , Wijayakumar,law-and-order, Cylendrababu
× RELATED டிஜி லாக்கர், எம் பரிவஹன் மொபைல்...