குவானாஜூவடோ : மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகினர். மெக்சிகோவின் குவானாஜூவாடோ மாகாணம், சலாம்கா பகுதியில் உள்ள இரவு விடுதியில் நேற்று அதிகாலை நுழைந்த மர்ம கும்பல் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியது. சரமாரியாக அவர்கள் சுட்டதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர். போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடியது. பெட்ரோல் திருட வந்த கும்பல் இந்த பயங்கர சம்பவத்தை நடத்தியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி