×

கட்சி சொன்னால் தூத்துக்குடியில் போட்டி மிரட்டி அல்ல... திரட்டி கூட்டணி : தமிழிசை புது விளக்கம்

தூத்துக்குடி:  தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி மண்டலத்தில் பாஜ கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நாங்கள் அமைத்துள்ள கூட்டணி நல்ல கூட்டணியாக இருக்கிறது. நாங்கள் யாரையும் மிரட்டி கூட்டணி அமைக்கவில்லை. நல்ல கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்து உள்ளோம். நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். கட்சி அனுமதித்தால் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடியில் பாஜ சார்பில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சிகளில் தமிழிசை பேசியதாவது: காமராஜரை தோல்வி அடையச் செய்த கட்சி காங்கிரஸ். காமராஜரை கொண்டாடும் கட்சி பாஜ. இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு  காமராஜரை பற்றி பேச தகுதி இல்லை. பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பாஜ தனி சட்டம் கொண்டு வந்துள்ளது. பெண்குழந்தைகள் படிக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Party ,Thoothukudi ,Murti Alliance ,Tamilnadu , party is not in Thoothukudi rival ,threat,coalition
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்