×

வாக்காளர்கள் பலி ஆடு அல்ல: நாஞ்சில் சம்பத் பேட்டி

சென்னை: சென்னை ராயபுரத்தில் காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் மனோகர் தலைமையில் “வகுப்பு வாதத்திற்கு விடை கொடுப்போம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. ராயபுரம் மக்கள் விழிப்புணர்வு மையத்தில் நடந்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத, மதவாத சக்திகளை வீட்டுக்கு அனுப்புவதற்காக தீவிர பிரசாரம் செய்யப்போகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். மதசார்பற்ற ஆட்சியாக ராகுல்காந்தி தலைமையில் இந்தியாவில் ஆட்சி அமையும். வாக்காளர்களை விலைகொடுத்து வாங்க முடியும் என்ற அரசியல்வாதிகளின் அசட்டுத்தனமான நம்பிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கழுத்தில் மாலை போட்டு தண்ணீர் அடித்து பலி கொடுக்கும் ஆடு அல்ல என்பதை வைகைசெல்வன் தெரிந்து கொள்ள வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Voters ,Sampath ,Nanjing , Voters killed and sang
× RELATED சூதாடிய 4 பேர் கைது