×

அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

சென்னை; கட்டுமான தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் பழனிசாமி,  கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில்  விரைவில் இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட  இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த உணவுக்கான கட்டிட நல வாரியம் மூலம் அரசுக்கு செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.  இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் சென்னை மாநகராட்சிக்கும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரியம் இடையே போடப்பட்டிருந்தது.

கட்டிட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, இலவச உணவு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். காலை 9.30 மணி அளவில் சென்னை சாந்தோம் அம்மா உணவகத்தில் நடைபெற்ற விழாவில், கலந்துகொண்டு, கட்டிட தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். முதல்வருடன் அமைச்சர்கள், மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நடராஜன் ஐபிஎஸ், பதர் சயித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : construction workers ,Mamma Restaurant , Construction workers, free food, mom restaurant
× RELATED மின்சாரம் பாய்ந்து தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 தொழிலாளர்கள் பரிதாப பலி