பெய்ரூட்: சிரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 ராணுவ வீரர்கள் பலியாகினர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அன்சார் அல் தாவ்ஹித் அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் அரசு படையை சேர்ந்த 21 வீரர்கள் கொல்லப்பட்டதாக சிரியாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். இதனால் சிரியாவில் பதற்றமான நிலை காணப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி