×

ஜெ. மரண வழக்கு ஓபிஎஸ் இழுத்தடிப்பு தங்க தமிழ்ச்செல்வன் சந்தேகம்

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன்  நேற்று அளித்த பேட்டி: இரட்டை இலை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்பார்த்தது தான். அந்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். எங்களை பொறுத்தவரை சின்னம் முக்கியமில்லை. ஏற்கனவே நாங்கள் ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அங்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக டெபாசிட் இழந்தது. அதுபோல வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய தோல்வியைச்  சந்திக்கும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா கொன்றதாகத் தான் விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர். உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் ஒரே மாதத்தில்  முடித்து தீர்ப்பு சொல்லி இருப்பார்கள். இத்தனை மாதங்களாக இழுப்பதற்கு காரணம், ஜெயலலிதா சாவில் மர்மம் இல்லை.  இதை வெளியில் சொன்னால் அமமுகவுக்கு நல்ல பெயர் ஏற்பட்டு  விடும் என்பதற்காகவே வழக்கை ஓ.பன்னீர்செல்வம் இழுத்தடித்து வருகிறார். இவர்கள் இந்த வழக்கை முடிக்க மாட்டார்கள்.இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : J. ,OBS ,Thamilselvan , J. Death, case , OBS, Gold Thamilselvan ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. மாநில...