×

பாமகவின் கோரிக்கைகள் ஆராயப்படும்: ஓபிஎஸ் பேட்டி

பெரியகுளம்: பாமக அதிமுவிடம் அளித்த 10 கோரிக்கைகளின் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
கூறியுள்ளார்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அளித்த பேட்டி:
 அதிமுக தொண்டர்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. இதனால் இங்கிருந்து சென்ற தொண்டர்கள் திரும்பி இதே இயக்கத்திற்கு வருவார்கள்.

தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்து நல முடிவு எட்டப்படும். இதேபோன்று இன்னும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.பாமக எங்களிடம் தந்த 10 கோரிக்கைகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து  நிறைவேற்றப்படும். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மத்திய, மாநில அரசின் கொள்கைகளை கூறி வாக்கு சேகரிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய நதிநீர் இணைப்பு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பதிலளிக்க மறுத்து ஓ.பன்னீர்செல்வம் எழுந்து சென்று விட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PMG ,interview ,OBS , Demands,PM, Exploring, OBS
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு