×

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானம்..... சுட்டுவீழ்த்திய இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப்படையின் F -16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை நேற்று குண்டுவீசி தகர்த்தது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தா போர் விமானங்கள் ரஜோரி ராணுவ நிலை அருகே குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.குண்டுவீசிய பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் துரத்தி அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படை விமானங்களின் ஆற்றல் மிகு செயல்பட்டால் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் குண்டுவீசி தாக்கிய நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ரா அமைப்பின் தலைவர் உள்ளிட்டோருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,border , Pakistan Air Force, Indian Air Force,
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...