ஸ்ரீநகர் : இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசியதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதான்கோட் விமான நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி