×

தீவிரவாதிகள் மட்டுமே இலக்கு, பாக்., மக்கள் இல்லை : வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே

டெல்லி: பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை வான்வழி தாக்குதல்கள் மூலம் அழித்தது தொடர்பாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தானை களமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே அந்நாட்டிற்கு தெரியாமல் தீவிராத சதி திட்டங்களை ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீட்டியிருக்க முடியாது. எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்ட தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் பயிற்சி மையம் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் மக்களை தாக்குவது இந்தியாவின் எண்ணம் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay Gokhale ,Pak , Kashmir border, Indian Air Force, Foreign Secretary Vijay Gokhale
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...