சென்னை: சரியாக கணக்கிட்டு பொதுப்பணித்துறையில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பொதுப்பணித்துறையில் சுமார் ஆயிரம் பேர் வேலை இழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 200 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில் சுமார் ஆயிரம் பேர் வேலை இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை சரியாக கணக்கிட்டு முழுமையாக நிரப்ப வேண்டும். தவறான அறிக்கையினால் வேலை இழந்திருப்பவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி