×

உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பலுடன் டைரக்டர் பாலகிருஷ்ணனுக்கு தொடர்பு? : கலெக்டரிடம் துணை நடிகையின் தாய் புகார்

நாகர்கோவில்: டைரக்டர் பாலகிருஷ்ணனுக்கு உடல் உறுப்புகள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக குமரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்த துணை நடிகை சந்தியாவின் தாய், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். சென்னையில் படுகொலை செய்யப்பட்ட துணை நடிகை சந்தியாவின் தாய் பிரசன்னகுமாரி மற்றும் உறவினர்கள் குமரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: எனது மூத்த மகள் சந்தியாவை தூத்துக்குடி டூவி புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு கடந்த 2000ல் திருமணம் செய்து கொடுத்தோம். இரண்டு குழந்தைகள் உள்ளனர். சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் சென்னையில் சினிமா தயாரிப்பாளராக, டைரக்டராக இருந்து வந்தார். பாலகிருஷ்ணனின் தாயாரும், தம்பியும் சந்தியாவை துன்புறுத்தி வந்தனர். உன்னை துண்டு துண்டாக வெட்டி ெகாலை செய்வேன் என அவர் மிரட்டியதாக சந்தியா என்னிடம் பலமுறை கூறியுள்ளார். மேலும் நீ அழகாக இருக்கிறாய், உனக்கு இந்த அழகு தேவையில்லை, என்று சந்தியாவுக்கு 8 முறை கட்டாயமாக மொட்டையடித்து, பச்சைக்குத்தியும் துன்புறுத்தி வந்தார்கள். இது தொடர்பாக அவர் தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அது போலீசாரின் விசாரணையில் இருந்து வருகிறது.

என்னுடன் ஊருக்கு வந்த சந்தியாவை அவளுடைய கணவர் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு நீ சென்னைக்கு வந்துவிடு நாம் சந்தோஷமாக வாழலாம் என்று கூறி தந்திரமாக அழைத்து சென்றார். அதன் பின்னர் டிசம்பர் 25ம் தேதி வீட்டிற்கு வந்து என்னிடம் 75 ஆயிரம் பெற்றுச் சென்றாள். அதன் பின்னர் ஒரு நாள் மட்டும் இருவரும் என்னிடம் பேசினர். அதன் பிறகு பாலகிருஷ்ணன் மட்டும்தான் என்னிடம் பேசி வந்தார். சந்தியா எங்கே என்று கேட்டால் அவள் வெளிநாடு செல்ல தயாராகி விட்டாள் என்று கூறிவந்தார். அதன் பிறகு சென்னை குப்பை கிடங்கில் கிடைத்த அவளது கை, கால்களை பார்த்து கொலை ெசய்யப்பட்டதை உறுதிபடுத்தினோம். ேபாலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்த போது சந்தியாவை கொலை செய்து 7 பாகங்களாக வெட்டி குப்பை கிடங்கில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார். ஆனால் அவரின் இதர உடல் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. காவல்துறை விசாரித்தும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. எனவே பாலகிருஷ்ணனுக்கு உடல் பாகங்கள் விற்கும் கும்பலிடம் தொடர்பு இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே மீதமுள்ள உடல் உறுப்புகளை மீட்க வேண்டும். மொத்த உடலையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். எனது மகள் சந்தியாவின் 2 குழந்தைகளும் பாலகிருஷ்ணனின் தம்பி னிவாசனிடம் உள்ளது. அந்த குழந்தைகளையும் எங்களுக்கு காண்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பிரசன்னகுமாரி நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது மகள் சந்தியாவின் கொலை குறித்து உண்மைகள் வெளிவர சிபிஐ கொண்டு விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balakrishnan ,gang ,collector ,complainant , Director Balakrishnan, gang that sells body parts?
× RELATED வயலில் இரைதேடும் பறவைகள் வங்கிகளில் சந்தேகப்படும்படி