×

கோயம்பேட்டில் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்

சென்னை: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்த டிப் டாப் ஆசாமி ஒருவர் தன்னை போலீஸ் என கூறி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதை கண்ட கோயம்பேடு போலீசார் அந்த நபரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அப்போது, உளவுப்பிரிவு போலீஸ் டி.ஐ.ஜி என்று கூறி பலரை ஏமாற்றியது தெரியவந்தது. விசாரணையில் அவர் செங்கோட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (25) என்றும் தந்தை போலீசாக இருந்தபோது இறந்து விட்டதாகவும் கருணை அடிப்படையில் போலீஸ் வேலை வாங்க டி.ஐ.ஜி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். போலீஸ்காரர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் பணம் வசூலித்து, இருவரும் பங்குபோட்டுகொண்டதாக கூறினார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : policeman , Koyambedu, fake policeman
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...