×

காணாமல் போன கல்லூரி மாணவி சடலமாக மீட்பு: போலீஸ் புலன் விசாரணை

தங்கவயல்:தங்கவயல் மாரிக்குப்பம் கிராக்கர்ஸ் மாடல் அவுஸ் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன். பெங்களுருக்கு தின பயணியாக சென்று தனியார் கம்பெனியில் பணியாற்றி வருபவர். இவர் மகள் கிரித்திகா ஹரிணி வயது.17. ராபர்ட்சன் பேட்டை புனித தெரேசாள் கல்லூரியில் பி.யூ.சி.படித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு செல்வதாக கூறி  சென்ற கிரித்திகா வீடு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் தங்கள் உறவினர்களின் வீடுகளில் தேடி வந்த நிலையில்,தங்கவயலில் இருந்து கேசம்பள்ளா செல்லும் சாலையில் உள்ள ராமாபுரம் ஏரியின் கரையில் கைப்பை இருப்பதை கண்ட கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று ஏரியில் ஒரு உடல் மிதப்பது குறித்தும் ஆண்டர்சன் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தீயணைப்பு படையினருடன் ஏரிக்கு சென்ற போலீசார் உடலை மீட்டனர். விசாரணையில் அது காணாமல் போன மாணவி கிரித்திகா என்பது தெரிய வந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஆண்டர்சன் பேட்டை போலீசார், வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post காணாமல் போன கல்லூரி மாணவி சடலமாக மீட்பு: போலீஸ் புலன் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thangavyal ,Krupakaran ,Marikuppam Crackers ,Bangalore ,Dinakaran ,
× RELATED நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது