×

குட்கா ஊழல் வழக்கு போட்டவர்களுடன் கூட்டணி வைத்ததுதான் சந்தர்ப்பவாதம் : அமைச்சர் ஜெயக்குமாருக்கு காங்கிரஸ் பதிலடி

சென்னை: தமிழக மீனவர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் சபீன் தலைமை வகித்தார்.  பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: அமைச்சர் ஜெயக்குமார் திமுக கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று விமர்சித்திருக்கிறார். எங்கள் கூட்டணியில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது. நாங்கள் அதிமுகவுக்கு எதிராக 25 ஊழல் குற்றச்சாட்டுகளை சொன்னோமா. நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்களே அவர்களுடன் இப்போது கூட்டணி சேர்ந்துள்ளார்களே, அதற்கு பேர்தான் சந்தர்ப்பவாத கூட்டணி. தலைமை செயலாளர் அறையில் ெரய்டு, அமைச்சர்கள் மீது குட்கா வழக்கு, இதையெல்லாம் செய்த பாஜகவுடன் அவர்கள் போய் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். சந்தர்ப்பவாத கூட்டணி வைத்தது அவர்களா, நாங்களா? அதிமுகவை கசக்கி பிழிந்து பாஜ ஒரு கூட்டணியை அமைத்திருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் செய்தித்தாள்களை எல்லாம் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். சந்தர்ப்பவாத கூட்டணி என்பது முழுக்க முழுக்க அதிமுக, பாஜ, பாமக கூட்டணிதான்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,Gudka ,Minister Jayakumar ,Congress , Opportunism, Congress retaliation
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்