சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்., 24ம் தேதிமுதல் விருப்பமனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விருப்ப மனு கட்டணம் பொது தொகுதிக்கு ரூ.20,000 தனித்தொகுதிக்கு ரூ.10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி