ஸ்ரீநகர் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில், ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் ஆசாராமின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை ஜோத்பூர் அருகேயுள்ள தனது ஆசிரமத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆசாராமுக்கு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
அவர் தற்போது தண்டனை பெற்று நிலையில், சாமியார் ஆசாராமுக்கு ஜாமீன் வழங்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம் அந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி