×

வாக்காளர்களிடம் நிதி திரட்டும் சுயேச்சை வேட்பாளர்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பம்ப்செட் தொழில் அமைப்பை சேர்ந்த மணிராஜ் போட்டியிடுகிறார். இவருக்கு ‘ஸ்பேனர்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, வேட்பாளர்கள்தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆனால், இந்த சுயேச்சை வேட்பாளர் வாக்காளர்களிடம் வாட்ஸ் அப் மூலம் நிதி திரட்டி வருகிறார். அதன்படி, ‘‘நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தொழில் முனைவோராக வளர்ந்துள்ளேன். தற்போது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த போர்களத்தில் வெற்றி பெற நல்ல மனம் படைத்தோர் பொருளாதார ரீதியாக தேர்தல் நிதி அளித்து எனக்கு உதவ வேண்டும்’’ என கூறி, தனது வங்கி கணக்கு எண்ணையும் வாட்ஸ் அப்பில் குறுச்செய்தியாக வெளியிட்டுள்ளார். …

The post வாக்காளர்களிடம் நிதி திரட்டும் சுயேச்சை வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : Maniraj ,Singhanallur ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை, பொள்ளாச்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க மேற்பார்வையாளர்கள் நியமனம்